டெசோ பந்த்: தமிழகம் முழுவதும் பரவலாக கடைகள் அடைப்பு, பஸ், ஆட்டோ ஓடுகிறது

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக டெசோ அமைப்பின் சார்பில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை நடக்கும் வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் இது குறித்து மத்திய அரசோ, மாநில அரசோ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று வழக்கம் போல் பேருந்துகள், ரயில்கள் ஓடுகிறது. மேலும் கடைகளை அடைக்குமாறு வணிகர்களை யாரும் வற்புறுத்தக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
டெசோ வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications