ஆட்டுக் கறியுடன் மாட்டுக் கறியை கலந்துவிடும் இங்கிலாந்து ‘இந்திய’ உணவகங்கள்
லண்டன்: உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது வியாபரிகளின் வியாதிதான்.. இந்த வியாதிக்கு விதிவிலக்கான தேசமே இல்லை போல்... அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பர்கரில் குதிரைக் கறியை கலந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து வாழ் இந்துக்கள் அமைப்பினர் இன்னொரு குண்டை தூக்கி வீசியுள்ளனர். இந்துக்களில் வெஜிடேரியனும் உண்டு...நான் வெஜிடேரியனும் உண்டு.. வெஜிடேரியன்களுக்கு இதுவரை தாங்கள் சாப்பிடும் உணவில் எந்தக் குழப்பமும் வந்தது இல்லை. நான் வெஜிடேரியன் சாப்பிட விரும்பும் இந்துக்களுத்தான் ரொம்பவே அச்சமாம்.. அப்படி என்ன?
இங்கிலாந்து நாட்டில் உணவகங்களில் பரிமாறப்படும் ஆட்டுக் கறி மீது இப்போது அவர்களுக்கு டவுட்டு வந்துவிட்டது. சில உணவகங்களில் ஆட்டுக் கறி ரொம்ப காஸ்ட்லியாக இருப்பதால் லைட்டாக மாட்டுக் கறியை மிக்ஸ் செய்துவிடுகிறார்களாம்.. பொதுவாக இது டக்கென கண்டுபிடிக்கப்படுவதில்லை.. ஆனால் ஆட்டுக் கறி பிரியர்கள் சும்மா விடுவார்களா? புகார் தட்டிவிட்டுவிட்டனர்.

சோதனை
அப்புறம் என்ன? இங்கிலாந்தில் இயங்கும் 126 இந்திய நிறுவனங்கள் சந்தேகப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டன. அந்நாட்டு உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் ரெய்டுக்கும் போய் ஆய்வு நடத்தியிருக்கின்றனர்.

ஆட்டுக் கறியுடன் மிக்ஸிங்
இந்த 126 நிறுவனங்களில் 46 உணவகங்களில் பிராடுத்தனம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறி என்று இந்த உணவகங்கள் பரிமாறியதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் ஒரு கூத்து..

46ல் 13 நிறுவனங்கள்
வசமாக சிக்கிய 46 நிறுவனங்களில் 33 செய்த பிராடுத்தனம் கண்டு இங்கிலாந்து அதிகாரிகள் அப்படியே ஆடிப் போய்விட்டனராம். இவை அனைத்திலுமே ஆட்டுக் கறி என்று விற்பனை செய்யப்பட்டது 'பியூர்' பீப் (மாட்டுக் கறிதானாம்!) மிச்ச 13நிறுவனங்கள்தான் ஜஸ்ட் மிக்ஸிங்...ஆட்டுக்கறியோடு நைசாக மாட்டுக் கறி கலந்தனவாம்! வேறு என்ன செய்யப் போகிறார்கள்.. இழுத்து மூட முடிவு செய்திருக்கின்றனராம்! இன்னும் இந்த உண்மையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலையாம்.. இதனால் பிராடு ஹோட்டல்களை பற்றி சொல்லுங்க என்கின்றனர் இங்கிலாந்து வாழ் இந்துக்கள்!












Click it and Unblock the Notifications