கிளிமஞ்சாரோவிலும் ஏறி 7 வயது இந்திய சிறுவன் சாதனை!!
Subscribe to Oneindia Tamil

இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் பாலாஜியின் மகனான ஆர்யன் என்ற இந்த சிறுவன் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் உடையவன்.
இந்த ஆர்வம் தான் ஆர்யனை, உலகின் மிக உயரமான, 8,848 மீட்டர் உயரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனை புரிய வைத்தது.
அதைதொடர்ந்து 5554 மீட்டர் உயரமுள்ள கல்பதரு மலையின் மீதேறி சிகரத்தை எட்டியதுடன் ஆர்யனின் சாகசப் மலையேற்றம் நிற்கவில்லை.
தற்போது 5895 மீட்டர் உயரமுள்ள ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள மிக உயர்ந்த சிகரமான, மூன்று எரிமலை கூம்புகளை கொண்ட கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி, அங்கு இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து புதிய சாதனையை ஆர்யன் செய்துள்ளான். இந்த இளம் வயதில் இப்படியொரு சாதனையை படைத்துள்ள ஆர்யனுக்கு கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்ட முதல் 7 வயது சிறுவன் என்ற உலகப் புகழும் சேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications