மதுரையில் கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவர் பலி: மக்கள் சாலை மறியல்
மதுரை: மதுரையில் இன்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவர் மீது பெண்கள் கல்லூரி பேருந்து மோதியதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
மதுரை ராஜாஜி சாலை இ.பி. காலனியைச் சேர்ந்த விவேகனாந்தன் என்பவரின் மகன் கரண் விக்னேஷ். அவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்தது. அது கரண் விக்னேஷ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அண்மை காலமாக மதுரையில் உள்ள கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநர்கள் கவனக்குறைவால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். பல கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் உரிமம் பெறாமலேயே பணியாற்றுவதாக புகார்கள் வருகின்றனவாம்.












Click it and Unblock the Notifications