கடலூரில் வெற்றிகரமாக டெசோ வேலை நிறுத்தம்! நீதிமன்றம் புறக்கணிப்பு!!மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
கடலூர்: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் கடலூரில் 90% வெற்றி பெற்றது.
கடலூரில் வணிக நிறுவனர்கள், மோட்டார் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் அனைவரும் முன் வந்து பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தந்தனர். அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக டெசோ அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 90% கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முழுமையாகவும், தூத்துக்குடி நகரில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி பழைய, புதிய பேருந்து நிலைய கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்












Click it and Unblock the Notifications