இலங்கைக்கு எதிராக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம்
செங்குன்றம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புழல் ஜெயில் கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணி அளவில் தண்டனை கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது 23 கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை செய்ய வேண்டும். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரம் இருந்து வரும் கைதிகளிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications