ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழிக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த கலைஞர் டிவி அமிர்தம்

Subscribe to Oneindia Tamil

2G Scam
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கருணாநிதியின் மகளும் திமுக எம்.பியுமான கனிமொழிக்கு ஆதரவாக கருணாநிதியின் சகோதரி மகனும் கலைஞர் டிவி நிர்வாகியுமான அமிர்தம் சாட்சியளித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் கருணாநிதியின் சகோதரி மகனும் கலைஞர் டிவி தலைமை நிதி அதிகாரியுமான அமிர்தம் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார்..

அப்போது அவரிடம் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் யு.யு. லலித் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அமிர்தம், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. டிவி தொழிலில் கனிமொழி நாள்தோறும் பங்கெடுக்கவில்லை. நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பேற்ற 20 நாட்களிலேயே அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். திமுக மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி நியமிக்கப்பட்டதால் இயக்குநர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அதன் பிறகு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை. அவர் பதவி விலகிய 18 மாதங்களுக்கு பிறகுதான் சினியூக் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவி கடனுதவி பெற்றது'' என்றார்.

மேலும் கலைஞர் டிவி நிர்வாகத்தில் கனிமொழியின் தலையீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இல்லை. அவரது தந்தையின் வலியுறுத்தலால்தான் கலைஞர் டிவி இயக்குநராக கனிமொழி பொறுப்பேற்றார் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமிர்தத்தை சிபிஐ விசாரித்தபோது, கலைஞர் டி.வி. நிறுவன இயக்குநர்களில் ஒருவராக கனிமொழி இருந்தார். ஆனால் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதில் சில பிரச்னைகள் நிலவின. அதனால், 2007-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தனது பதவியை கனிமொழி ராஜினாமா செய்தார். டி.வி. நிர்வாகத்தின் அன்றாட செயல்பாடுகளில் கனிமொழி ஆர்வத்துடன் பங்கெடுத்தார் என்று கூறியிருந்திருக்கிறார். இதனால் கலைஞர் டிவி செயல்பாட்டில் கனிமொழியின் பங்களிப்பை நிரூபிக்க அமிர்தத்தை மட்டுமே ஒரே சாட்சியாக சிபிஐ கருதியது.

இதனால்தான், அவரை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சிபிஐ சேர்த்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் அமிர்தம் நேற்று அளித்த சாட்சியம் கனிமொழிக்குச் சாதகமாகவும் அவருக்கு எதிரான சிபிஐ வழக்கை பலவீனப்படுத்தும் வகையிலும் அமைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியை 2011-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னர் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+