”ப்ளீஸ்…இன்னைக்கு மட்டும் ஹாரன் அடிக்காதீங்க” : சென்னை போலீஸ் வேண்டுகோள்
சென்னை: ஒலி மாசுபாட்டைத் தடுக்க இன்று 16-ம் தேதியை ‘ஹாரன் எழுப்பாத தினமாக' கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, பேஸ்புக் சமூக வலைதளத்தில் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 'அலையின் ஓசை உள்பட பல ஓசைகளையும் நாம் ரசிக்கிறோம். அதே நேரம் வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் பலத்த இரைச்சல் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் உணர்வோம்.
இன்று மார்ச் 16-ம் தேதியை ஹாரன் எழுப்பாத தினமாக மோட்டார் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும்'. இவ்வாறு பேஸ்புக் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி பேஸ்புக் தளத்தில் வெளியான முதல் 3 மணி நேரத்திலேயே 100-க்கும் மேற்பட்டவர்கள் இத்தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் ‘லைக்' கொடுத்துள்ளனர்.
‘உலக சுகாதார தினம்', 'லஞ்ச ஒழிப்பு தினம்', போல அனுமதிக்கப்படாத இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்யாத தினம் என்று ஒரு நாளை கடைபிடிக்கலாமே' என்றும் ஒருவர் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ‘ஹாரன் சத்தம் இல்லாத தினமாக' கடைபிடிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஹாரன் சத்தத்தின் டெசிபல் அளவு (நேற்றைய நிலவரம்)
| இடம் | அதிகபட்சம் | குறைந்தபட்சம் |
| தி.நகர் | 88.4 | 45.9 |
| கிண்டி | 72 | 51.3 |
| எழும்பூர் | 66.42 | 44.1 |












Click it and Unblock the Notifications