தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சென்னை ஐஐடி மாணவர்களும் களத்தில் குதித்தனர்!

Subscribe to Oneindia Tamil

Chennai IIT students hunger strike for Tamil eelam
சென்னை: தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல், மருத்துவ மாணவர்களும் இணைந்தனர். இன்று சென்னை ஐஐடி மாணவர்களும் களத்தில் குதித்திருக்கின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

2-வது உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை ஐநா எப்படி விசாரித்ததோ அதுபோல இலங்கை இறுதிப் போரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் விசாரிக்க வேண்டும்; தென் சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் ஐஐடி மாணவர்களின் கோரிக்கைகள்.

பொதுவாக ஐஐடி மாணவர்கள் தமிழர் நலன்சார்ந்த போராட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே வருவதையே வழக்கமாக கடைபிடித்து வந்தனர். தற்போது தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி ஐஐடி மாணவர்கள் களத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+