சென்னை மெரினாவில் நள்ளிரவில் போராட்டம்- 20 சட்ட மாணவர்கள் கைது- தொடர் உண்ணாவிரதம்!

தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு பின்னரே போராட்டம் தீவிரமானது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் பள்ளிக்கூட மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென நேற்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்றனர். ஆனால் மாணவர்களோ மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றனர். இதை ஏற்காத போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மாணவர்கள் வேனில் ஏற்றப்பட்டு மயிலாப்பூரில் சமூக நலக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் 20 பேரும் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications