இலங்கை விவகாரம்: மத்திய அரசு , காங். கூட்டணியில் திமுக நீடிக்காது என்பது உறுதி: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை அமெரிக்காவின் தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும், இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும். குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார்.
மேலும் எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று கூறிய அவர், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications