சீன பள்ளிகளில் கற்பிக்கப்படும் காந்தியின் போதனைகள்

Subscribe to Oneindia Tamil

Gandhi
டெல்லி: இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை முறையில் போராடி வரலாற்றில் இடம் பிடித்தவர் மகாத்மா காந்தி. அவரது போதனைகள் மனித நல்லொழுக்கத்துக்கு கலங்கரை விளக்கம் போன்றது. எனவே இந்தியாவில் மட்டுமல்ல அண்டை நாடான சீனாவில் குழந்தைகள் பள்ளிப் பருவத்திலேயே காந்தி போதனைகள் கற்பிக்கப்படுகின்றன என்று சீன கல்வியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சீனாவின் தெற்கு சிங் நார்மல் பல்கலைக்கழக பேராசிரியரும், சீன மொழியியல் வல்லுநருமான குவான்யு ஷாங் பல்வேறு புத்தகங்களை சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய முன்னாள் அரசியல் நிபுணர் பி.ஏ.நசரெத் எழுதிய ‘காந்தியடிகளின் தன்னிகரில்லா தலைமை பண்பு என்ற நூலை தற்போது இவர் சீன மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்காக இந்தியா வந்த ஷாங் கூறியதாவது:

முன்பெல்லாம் சீன கல்வியாளர்கள் மட்டுமே காந்தியை பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால், இப்போது ஏராளமான சீன மக்கள் இந்திய சுதந்திர போராட்டம், காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டம், அவரது போதனைகளை அறிந்துள்ளனர்.

சீனாவில் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் பல்வேறு நிலைகளிலும் காந்தியடிகளின் போதனைகள் குறித்து கற்பிக்கப்படுகின்றன. ஒருமுறை பீஜிங் பல்கலைக்கழகத்துக்கு சிறப்புரையாற்ற சென்றபோது ஏராளமானோர் காந்தியை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பது தெரிய வந்தது.

காந்தி, நேரு குறித்து பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளேன். காந்தி குறித்து ஏற்கனவே ஏராளமான புத்தகங்கள் சீன மொழி யில் வெளியாகியுள்ளன. எனது இந்த மொழி பெயர்ப்பு புத்தகத்துக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+