Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவுக்கு எதிராக ராணுவ உளவுப் பிரிவை களம் இறக்கிய இலங்கை

Subscribe to Oneindia Tamil

Lankan intelligence act against US govt
கொழும்பு: அமெரிக்க அரசு ஜெனீவா, மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தால் கடும் கொதிப்புடன் உள்ள இலங்கை அமெரிக்காவுக்கு எதிராக தனது ராணுவ உளவுப்பிரிவை களம் இறக்கியுள்ளதாம்.

அமெரிக்காவை எதிர்த்து, தமிழர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி, ஏதோ தமிழர்கள்தான் அமெரிக்காவுக்கு எதிராக இருப்பது போல காட்ட முனைகிறார்களாம் ராணுவ உளவுப் பிரிவினர்.

யாழ்ப்பாணத்தி்ல பல இடங்களில் இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், 'எங்கள் வீட்டுப் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அமெரிக்காவே வாயை மூடு' 'எங்கள் தானைத் தலைவர் மகிந்த ராஜபக்சவே' போன்ற வசனங்கள் அந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டு உள்ளன.

ஆனால் மக்கள் முன்னணி என்று இந்த போஸ்டர்களில் பெயர் போட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில், ராணுவமே இருப்பதாக தமிழர்கள் கூறுகின்றனர்.

இதே அமைப்பின் பெயரில்தான் கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கொலை மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருந்தனர். அந்த அமைப்பே இப்போது அமெரிக்காவிற்கும் சவால் விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+