கருணாநிதியை திருப்திப்படுத்துவோம்.. சென்னை வந்த நாராயணசாமி பேச்சு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைத் திருப்திப்படுத்தும் வகையிலான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றுமத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த நாராயணசாமி அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது.
இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், திமுகதலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார்.
கடந்த 9 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பாஜக எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பாஜக குட்டையை குழப்ப பார்க்கிறது.
எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் சாமி.












Click it and Unblock the Notifications