கருணாநிதி நெருக்கடி.. ஐ.நா.வின் ஜெனீவா பிரிவின் இந்தியப் பிரதிநிதி டெல்லி விரைகிறார்!

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக வலியுறுத்தியதையடுத்து வேண்டாவெறுப்பாக அதை மத்திய அரசு ஏற்றது.
இந் நிலையில் தன்னை நேற்று சந்தித்த 3 மத்திய அமைச்சர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும் இனப் படுகொலைகள் என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்; நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட வரையறைக்குள் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாகவும், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, மேலே சொன்ன விஷயத்தை நாடாளுமன்றத்திலும் தீர்மானமாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளதாகக் கூறிய கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் குழுவும் ஆவன செய்வதாக உறுதியளித்துச் சென்றுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர்கள் குழு உறுதியளித்ததாக நம்பித்தான் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்.
இலங்கைப் பிரச்னையில் காங்கிரசுடனான இறுக்கம் தளர்ந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர்களுக்கு நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால்தான் இறுக்கம் தளர்ந்ததாக அர்த்தம் என்றார் கருணாநிதி.
அமெரிக்க தீர்மானத்தில் நீங்கள் கேட்கும் திருத்தங்களை இந்தத் தருணத்தில் கொண்டு வருவது சாத்தியமானதா என்ற கேள்விக்கு, அமெரிக்க தீர்மானத்தில் கேட்கும் திருத்தங்களையும் இணைத்துக் கொண்டுவர வேண்டும் என்று திமுக ஏற்கெனவே வலியுறுத்திச் சொல்லியிருக்கிறது என்றார் கருணாநிதி.
இதை மத்திய அரசு செய்யாவிட்டால் காங்கிரசுடன் கூட்டணி நீடிக்காது என்றும் கருணாநிதி 3 அமைச்சர்களிடமும் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் இலங்கைக்கு ஜால்ரா போடும் காங்கிரஸ் தலைமை மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியும் இயலாமையும் நிலவுகிறது.
இதையடுத்து இது குறித்து விவாதிக்க ஐ.நாவின் ஜெனீவா பிரிவின் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளார். அவர், இன்று வருவார் என்று தெரிகிறது. அவர் வந்தவுடன் இந்தத் தீர்மானம் குறித்தும், திமுக கோரும் திருத்தங்கள் குறித்தும் அவருடன் வெளியுறவுத்துறை மற்றும் ரா அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர்.
இதன் பின்னர் தங்களது முடிவை அதிகாரிகள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் தெரிவிப்பர். இதன் அடிப்படையிலும், ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவு தேவை என்ற நிதர்சனத்தை உணர்ந்த நிலையிலும், மத்திய அரசு முடிவுகளை எடுக்கும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications