15 ஆண்டு வாடகைதாரரா... அப்போ இனி அது உங்க வீடு: பஞ்சாப் அரசின் கலக்கல் திட்டம்
சண்டிகர்: தொழிலாளர்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வீட்டு வசதி திட்டத்தை, பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்தினர், தொடர்ந்து, 15 ஆண்டுகள், ஒரே வீட்டில் வசித்தால், அந்த வீடு, அவர்களுக்கு சொந்தமாக்கப்படும்.
பஞ்சாபில், கட்டுமான தொழில், சாலைத் தொழில் உள்பட, பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு விட்டு, வேறு ஊர்களில் இடம் பெயர்ந்து வசிக்கின்றனர்.
அதேபோல், சில நகரங்களில், கணிசமான மக்கள், குடிசைப் பகுதிகளிலும் வசித்து வசிக்கின்றனர். இவர்களின் நலனுக்காக, பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தள அரசு, புதிதாக வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பு தகவல்கள் கூறுகையில், இந்த திட்டம், முதலில், மொகாலி நகரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக, 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும், இரண்டு படுக்கை அறைகள் உடையதாக இருக்கும். இந்த வீடுகளுக்கான வாடகை, மாதத்துக்கு, 1,800லிருந்து, 2,000 வரை நிர்ணயிக்கப்படும்.
ஒரே குடும்பத்தினர், ஒரே வீட்டில், தொடர்ந்து, 15 ஆண்டுகள் வசித்தால், 16வது ஆண்டிலிருந்து, அவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக்கப்படும். அதற்கு பின், வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இடையிலேயே, வீட்டை காலி செய்தால், வேறு ஒருவருக்கு அந்த வீடு ஓதுக்கப்படும். இந்த நகரைத் தொடர்ந்து, மற்ற நகரங்களிலும், படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மொகாலி நகரில், ஏராளமான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களை விட்டு, இடம் பெயர்ந்து வசிப்பதால், முதலில் இந்த நகரத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என தெரிவித்தன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications