மதுரையில் இருந்து கோலாலம்பூர் பறக்கும் ஸ்பைஸ்ஜெட்
மதுரை: மலேசியாவின் கோலாம்பூர் நகருக்கு மதுரையில் இருந்து நேரடி விமான சேவையை நடத்துவதற்கு, சன் குழுமத்தில் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தெரியவருகிறது.
ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இந்த ரூட்டில் ஆபரேட் செய்வதற்கு மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அனுமதி வழங்கிவிட்டது.

இதுவரை கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் அந்த ரூட்டை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதையடுத்து, தற்போது ஏர் இந்தியா விமானம் மட்டுமே கோலாலம்பூருக்கான சேவையை தமிழகத்தில் இருந்து வழங்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக உள்ளது.
தற்போது மதுரையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் இயங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. மதுரை - கோலாலம்பூர் விமானங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் இயங்க தொடங்கலாம் என எதிர்பார்ப்பதாக மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து கோலாம்பூருக்கு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தவிர, இன்டிகோ நிறுவனமும் மலேசியாவிடம் விண்ணப்பித்திருந்தது. அவர்களுக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை.
இன்டிகோ சென்னையில் இருந்து விமானங்களை இயக்க அனுமதி கேட்டிருக்க, ஸ்பைஸ்ஜெட் மதுரையில் இருந்து இயக்க விண்ணப்பித்திருந்தது.












Click it and Unblock the Notifications