ஓ.பி.எஸ். தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை
சென்னை: தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. நடைமுறையில் உள்ள வரி விகிதங்களிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் கிடையாது நடைமுறையில் உள்ள வரி விகிதத்தை உயர்த்துவதும் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார்.பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மாநிலத்தின் வரி வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மூலதனத்தை ஈர்க்கும் வாய்ப்புகளில், குறிப்பாக, உற்பத்தி துறையில் ஒரு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு பொருளாதார நிலை சீரமைக்கப்பட்டு வருவதால் மதிநுட்பமிக்க கொள்கை முடிவுகளின் மூலம் 2012-2013-ம் ஆண்டு வரவு-செலவு திட்ட வரி வசூல் இலக்கு எய்தப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்.
இந்த பட்ஜெட் மீதான விவாதம் சட்சபையில் வரும் 25-ந் தேதி முதல் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications