புனித வியாழனன்று சிறை கைதிகளின் கால்களை கழுவும் போப் பிரான்சிஸ்

Subscribe to Oneindia Tamil

Pope Francis to wash feet of prisoners on Holy thursday
வாடிகன்: புனித வியாழனை முன்னிட்டு வரும் 28ம் தேதி போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள சிறையில் இருக்கும் 12 கைதிகளின் கால்களை கழுவவிருக்கிறார்.

அன்பு, கருணை ஆகியவற்றை இந்த உலகிற்கு போதித்த இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடர்களின் கால்களை கழுவினார். இயேசு பிரானை பின்பற்றும் விதமாக போப் ஆண்டவர்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வழக்கமாக போப் ஆண்டவர்கள் புனித வியாழன் அன்று வாடிகன் தேவாலயத்தில் வைத்து தான் கால் கழுவும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டில் போப் 16ம் பெனடிக்ட் இந்த வழக்கத்தை மாற்றி ரோம் நகரில் உள்ள கஸல் டெல் மார்மோ சிறைக்கு சென்று அங்கு இருந்த 12 கைதிகளின் கால்களை கழுவினார். இந்நிலையில் அவரது பாணியில் போப் பிரான்சிஸும் அதே கஸல் டெல் மார்மோ சிறைக்கு வரும் 28ம் தேதி அதாவது புனித வியாழன் அன்று மதியம் சென்று அங்குள்ள கைதிகளில் 12 பேரின் கால்களை கழுவவிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+