இலங்கை தமிழர் பிரச்சனை: திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக தூரோகம் இழைத்துவிட்டது என்ற அதிமுகவின் குற்றச்சாட்டை கண்டித்து திமுக உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2013-2014 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மீது பேசிய அதிமுக பெண் எம்.எல்.ஏவும் துரையூர் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதி தூரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
அதிமுகவின் இந்த குற்றச்சாட்டிற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக சார்பில் பேசிய உறுப்பினர் சக்கரபாணி, 1956 ஆம் முதல் இலங்கை தமிழர்களுக்கு பிரச்சனையில் திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் வளர்மதி ஆகியோர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், அந்த இனமே அழிவதற்கும் திமுக தான் காரணம் என்று கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஏற்கனவெ இன்று காலை தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் ஒரு ஆண்டு சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications