இத்தாலி 'கொலைகார' மாலுமிகள் வழக்கு: பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதான வழக்கை, பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கு தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 மீனவர்கள் மீது, அந்த வழியாக சென்ற என்ரிகா லெக்ஸி கப்பலில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை கைது செய்த கேரள காவல்துறை, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், இத்தாலி தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சென்ற கடற்படை வீரர்கள் இருவரும், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், கடந்த 22ம் தேதி மீண்டும் இந்தியா திரும்பினர். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறப்பு நீதிமன்றம் அமைக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தை மத்திய அரசு, கடந்த 23ம் தேதி கேட்டுக் கொண்டது.

இதனை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மெட்ரோபாலிடன் நீதிபதி, இத்தாலி கடற்படை வீரர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பார் எனத் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+