பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டம்: அரசு மருத்துவமனை வார்டு பாய் மீது முதல் வழக்கு
மும்பை: அறுவை சிகிச்சை அறைக்குள் சென்ற பெண் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவமனை ஊழியர் மீது பாலியல் வன்கொடுமைக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள உல்ஹாஸ்நகரைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள கம்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.35 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குள் சென்ற அவருக்கு 55 வயது வார்டு பாயான கோலி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கூல்லிடவே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
அந்த பெண் நடந்தது குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை போலீசிலும் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கடுமையான சட்டத்தின்கீழ் கோலி மீது தான் முதன்முதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications