ரூ. 24,000 கோடி மதிப்பு ஆவணங்கள்: சஹாரா அதிபர் சுப்ரதோ ராய்க்கு 'செபி' கெடு

சஹாரா பரிவார் குழும நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பங்குகள் மூலம் பொதுமக்களிடம் பணம் திரட்டியுள்ளனர்.
மீண்டும் 2009ம் ஆண்டு அவ்வாறு செய்ய முனைந்த போது இந்தியாவின் பங்குச்சந்தை ஒருங்கிணைப்பு நிறுவனமான செபி முதலீட்டாளர்களின் குற்றச்சாட்டினை முன்வைத்தது.
2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், சஹாராவின் இரண்டு நிறுவனங்களையும் முதலீட்டாளர்களுக்கு 174 பில்லியன் தொகையை மூன்று மாதங்களுக்குள் 15 சதவீத வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவினைப் பிறப்பித்தது.
ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றமும், அனைத்து சஹாரா நிறுவனங்களும் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவதைத் தடை செய்துள்ளது.
இந்த நிலையில் 24,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு உரிய ஆவணங்களை வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் செபி முன்னால் சமர்ப்பிக்கும்படி மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 8ம் தேதிக்குள் சுப்ரதோ ராயும், மற்ற மூன்று உயர்மட்ட நிர்வாகிகளான அசோக் ராய் சவுத்ரி, ரவி சங்கர் துபே, வந்தனா பார்கவா ஆகியவர்களும் செபி முன்னால் நேரடியாக ஆஜராகி சொத்து விபரங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் வரி ஆதாரங்கள் போன்ற தகவல்களைத் தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதியன்று இவர்கள் செபி முன்னால் ஆஜராகத் தவறினால், அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சஹாரா பரிவார் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு, அதிக தொழிலாளர்களைக் கொண்ட இரண்டாவது நிறுவனம் என்று டைம் பத்திரிகையால் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications