திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குண்டு வீச்சு- பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திடீரென ஒரு நபர் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சரமாரியாக வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பஸ் நிலையத்தின் முன் உள்ள சாலையில் ஒரு நபர் பையுடன் வந்தார். பின்னர் அந்தப் பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் நான்கை எடுத்து திடீரென சாலையில் வீசினார். இதில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. சிலர் காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications