9 ஆக உயரும் மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்- ஏப்ரல் முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

Cylinder
சென்னை: ஆண்டுக்கு 6ஆக இருந்த மானியம் விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் 9ஆக உயர்கிறது. இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எண்ணை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுப்பதற்காக மானிய விலையில் வழங்கக்கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது.

ஆறுக்கு மேல் மானியம்...

வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு மேல் தேவைப்படுவோர் மானியம் அல்லாத (கூடுதல் விலை) விலை கொடுத்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

உயர்வு...

பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு, 6 சிலிண்டருக்கு பதிலாக 9 சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக சிலிண்டர் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்த முடிவு செய்தது.

ஏப்ரல் முதல் மார்ச் வரை....

இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். எனவே இனி கூடுதல் விலை கெடுத்து சிலிண்டர் பெற தேவையில்லை.

எக்ஸ்ரா வேணுமா...?

12 மாதத்திற்கு 9 சிலிண்டர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மேல் தேவைப்படுவோர் அதிக விலை கொடுத்து தான் பெற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+