9 ஆக உயரும் மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்- ஏப்ரல் முதல் அமல்

ஆறுக்கு மேல் மானியம்...
வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதற்கு மேல் தேவைப்படுவோர் மானியம் அல்லாத (கூடுதல் விலை) விலை கொடுத்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
உயர்வு...
பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு, 6 சிலிண்டருக்கு பதிலாக 9 சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக சிலிண்டர் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்த முடிவு செய்தது.
ஏப்ரல் முதல் மார்ச் வரை....
இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். எனவே இனி கூடுதல் விலை கெடுத்து சிலிண்டர் பெற தேவையில்லை.
எக்ஸ்ரா வேணுமா...?
12 மாதத்திற்கு 9 சிலிண்டர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மேல் தேவைப்படுவோர் அதிக விலை கொடுத்து தான் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications