இன்னைக்கும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வெப்பச் சலனத்தின் காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக உள்பகுதியின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் சில நாள்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்த காரணத்தால், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தென் தமிழகத்தில் மழை பெய்தது. மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கணிசமான அளவு மழை பதிவானது.
வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ததாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகம், வட தமிழகத்தின் சில இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): சோழவந்தான், பெரியகுளம் - 90, மதுரை மாவட்டம் வாடிபட்டி, திருநெல்வேலி மாவட்டம் அரியகுடி - 80, செங்கோட்டை, தென்காசி, பெரியாறு அணை, உசிலம்பட்டி - 70, ராஜபாளையம் - 60, பாளையங்கோட்டை, கன்னியாகுமரி - 40, தேனி மாவட்டம் போடிநாய்க்கனூர், சங்கரன்கோவில் - 30.












Click it and Unblock the Notifications