சமாஜ்வாடி கட்சி ஆதரவை திரும்பப் பெற்றாலும் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: மன்மோகன்சிங் நம்பிக்கை

பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்காவின் டர்பன் சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்று இரவு நாடு திரும்பினார். அவர் நாடு திரும்பும் போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில். கூட்டணி ஆட்சி என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும். சில சமயங்களில் ஆட்சிக்கே அச்சுறுத்தல் ஏற்படுவதும் உண்டு. ஆனால் இதற்கெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிச்சயமாகப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சமாஜ்வாடி கட்சி ஆதரவை திரும்பப் பெற்றாலும் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அடுத்த பொதுத் தேர்தல் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி நடைபெறும்.
கூட்டணிக் கட்சிகளின் கட்டாயத்துக்காக சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட்டுவிட முடியாது. நடப்பு கணக்கு பற்றாக்குறை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% அளவுக்கு கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார் மன்மோகன் சிங்..












Click it and Unblock the Notifications