மதுரை ஆதீனம் வழக்குகளை ஏப்.1-ல் விசாரிக்க நித்யானந்தா புதிய மனு

Subscribe to Oneindia Tamil

Nithyanantha files new fresh demand in Madurai court
மதுரை: மதுரை ஆதீனம் மடம் தொடர்பான வழக்குகளை ஏப்ரல் 1-ம் தேதி விசாரிக்க வேண்டும் என நித்யானந்தா சார்பில் மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நித்யானந்தாவை அதிரடியாக நீக்கினார் ஆதீனம்.

எனினும் மதுரை ஆதினமடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடைவிதிக்கவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல்

ஆதீனமும், நித்யானந்தாவும் சேர்ந்து அமைத்த ஆதீன அறக்கட்டளையை கலைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இது தவிர தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

மதுரை ஆதீனம் தொடர்பான வழக்குகள் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணை ஏப்ரல் 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நித்யானந்தா சார்பில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை ஆதீனம் தொடர்பான வழக்குகளை ஏப்ரல் 1-ந்தேதி விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+