தென்கொரியாவுடன் இணைந்து போர் ஒத்திகை! இணைந்தது அமெரிக்காவின் அணுகுண்டு வீசும் விமானங்கள்!

Subscribe to Oneindia Tamil

சியோல்: அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம்... தயார் நிலையில் இருக்கிறோம் என்று வடகொரியா ஒரு பக்கம் போர் பிரகடனம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கொரியாவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் போர் ஒத்திகையில் அணுகுண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் விமானங்களையும் அமெரிக்கா பயன்படுத்தியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

U.S. B-2 stealth bomber conducts first bombing drill in Korea

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மீது ஐ.நா மூலம் தடைவிதித்து பெரும் நெருக்கடியை கொடுத்தது அமெரிககா. இதற்கு பதிலடியாக அமெரிக்காவை அணு ஆயுதம் கொண்டு அழிப்போம் என்று அறிவித்தது வடகொரியா.

இந்நிலையில் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் தென்கொரியாவுடன் இணைந்து மிகப் பிரம்மாண்ட போர் ஒத்திகையை அமெரிக்கா நடத்தி வருகிறது. இந்த போர் ஒத்திகையில் திருப்பமாக சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வீசக் கூடிய விமானங்களும் இணைந்திருக்கின்றன. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து 274 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிக் என்ற தீவகப் பகுதி மீது குண்டுகளை வீசி ஒத்திகை பார்க்கப்பட்டது. மொத்தம் 6500 மைல் தொடர்ச்சியாக பறந்து இந்த ஒத்திகையை நிகழ்த்திவிட்டு முகாமுக்கு திரும்பியது. இது வடகொரியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+