தருமபுரி மாவட்டத்தில் 24 போலி டாக்டர்கள் கைது : உபகரணங்கள் பறிமுதல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவப்பட்டம் பெறாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்கள் கூட டாக்டர்களாக பணிபுரிவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் முழுவதும் உள்ள போலி மருத்துவர் பட்டியலை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு 3 பெண்கள் உட்பட 24 போலி மருத்துவர்களை கைது செய்தனர்.இவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், 40க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அடிக்கடி போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைதானது நினைவிருக்கலாம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications