காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது: வைகோ ஆவேசம்
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. பொது மக்களின் குமுறலும், இலங்கை தமிழர்கள் சிந்திய ரத்தமும், வேதனை குரலும் சும்மா போகாது. காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து வியாபாரிகள், பொதுநல அமைப்புகள் உள்பட பலரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த பொது மக்களும் உண்ணாவிரத்தில் குதித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் சிங்கள ராணுவம் நடத்திய இனப் படுகொலை உலகில் எங்குமே நடந்திராத கொடுமை. இந்த கொடுமைக்கு பாடம் புகட்ட போர் குற்றவாளியான ராஜபக்சே சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்பட ஒட்டு மொத்த தமிழினமே கிளர்ந்து எழுந்துள்ளது.
நம் சொந்தங்கள், நம் உறவுகள் கண்ணீரும், கம்பலையுமாக கதறுவதை பார்த்து பொதுமக்களே வீதிக்கு வந்து தங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஏற்க முடியாது என்கிறார். பொது மக்களின் குமுறலும், இலங்கை தமிழர்கள் சிந்திய ரத்தமும், வேதனை குரலும் சும்மா போகாது. காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது.
பொது வாக்கெடுப்பு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை போல் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications