அடித்தார், கள்ளத் தொடர்பு வைத்தார்... மனைவி புகாரால் ராஜினாமா செய்த கேரள அமைச்சர்

கணேஷ்குமாரின் மனைவி டாக்டர் யாமினி தங்கச்சி போலீஸில் தனது கணவர் மீது கொடுத்த புகாரைத் தொடர்ந்து பதவி விலகினார் கணேஷ் குமார். முன்னதாக யாமினி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் என்னை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வருகிறார். கடந்த 14 வருடமாக அவரிடம்சித்திரவதையை அனுபவித்து வருகிறேன். மேலும் சமீபத்தில் என்னைக் கட்டி வைத்து அவர் அடித்து உதைத்தார்.
எனது மகனின் நண்பனின் தாயாரோடு அவருக்கு கள்ளத் தொடர்பும் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு செய்திருந்தார் கணேஷ் குமார். அதில் தனது மனைவி தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள காங்கிரஸ் பாலகிருஷ்ணன் பிரிவைச் சேர்ந்தவர்தான் கணேஷ்குமார். பாலகிருஷ்ணனின் மகன்தான் இவர். சமீபத்தில்தான் அப்பாவுக்கும், மகனுக்கும் முட்டிக் கொண்டு பின்னர் இருவரும் சமாதானமானார்கள் என்பது நினைவிருக்கலாம். கடந்த மாதம் இருவருக்கும் பிரச்சினை வந்தபோது மகனின் கள்ளத் தொடர்பைக் காரணமாக காட்டி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பாலகிருஷ்ண பிள்ளை முதல்வர் சாண்டிக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications