தென்னிந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்: கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil

கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா மிரட்டல் விடுத்து இருக்கின்றனர்.
ஆனால், தொழிலாளர்களின் இந்த மிரட்டல் அறிவிப்பு குறித்து கொழும்பு துறைமுக நிர்வாகத்திடம் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை என்று துறைமுக அதிகாரி நளின் அபோன்சோ தெரிவித்துள்ளார். கொழும்புக்கு ஒரு ஆண்டில் வரும் சரக்குப் பெட்டகங்களில் ஏறத்தாழ 60% தென் இந்திய துறைமுகங்களில் இருந்து வருபவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications