தெளிவான குழப்பத்தில் ராகுல், 'மோடிஃபோபியா'வால் அவதி: பாஜக

Subscribe to Oneindia Tamil

Rahul is confused, suffering from Modi phobia: BJP
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குழப்பத்தில் இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்து வரும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார்.

இது குறித்து பாஜக செயதித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெத்கர் கூறுகையில்,

ராகுலின் உரை அவர் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. 9 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடந்தவை குறித்து அவர் பதில் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஊழல் பற்றியோ விலை உயர்வு பற்றியோ பேசவில்லை. கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் கேள்வி கேட்டார். அது மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்வது போன்று இருந்தது.

அவரது பேச்சில் மோடி மீதான பயம் தெரிந்தது. ராகுல் குழப்பமான கொள்கைகள் கொண்ட ஒரு குழப்பமான தலைவர் என்றார்.

மேலும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளரான நிர்மலா சீதாராமன் கூறுகையில்,

ஏகப்பட்ட ஐடியாக்கள் உள்ளது என்று ராகுல் கூறியபோது அவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், தற்போது துணை தலைவர் மற்றும் எம்.பி.யாக இருந்தும் அவரது ஐடியாக்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+