2014-க்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க இலக்கு: நீல்கேனி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2014-ம் ஆண்டு இறுதிக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் நந்தன் நீல்கேனி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய நீல்கேனி, அனைத்து இந்தியக் குடிமகன்களுக்கும் ஆதார் அட்டைகளை வழங்குதே எங்களின் இலக்கு. கடந்த பிப்ரவரி வரை 28 கோடியே 78 லட்சம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஏராளமானோர் தங்களது பிறந்த தேதியை உறுதி செய்யத் தேவையான ஆவணங்கள் ஏதுமின்றி இருக்கின்றனர்.
அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால், நாட்டில் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்படும், இதனால் உரியவர்களுக்குப் பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications