தமிழக அரசின் இலவச லேப்டாப்பை பயன்படுத்தும் லண்டனில் படிக்கும் மாணவி- அமைச்சர் 'ஆனந்தக் கண்ணீர்'
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக நிரூபிக்கப்பட்டால், அக்கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று உயர்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்தீபன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட வரமுறை இல்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துகுறித்து பெற்றோர் புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட மாணவரை கல்வி நிர்வாகம் பழிவாங்கி மிரட்டுகிறது' , என்றார்.
அப்போது உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கீட்டு அளித்த பதிலில்,
உறுப்பினர் ஆதாரத்துடன் கூறினால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இதுவரை அப்படி புகார் எதுவும் வரவில்லை. பொத்தாம் பொதுவாக உறுப்பினர் கூறக்கூடாது.
கட்டாய நன்கொடை வசூலிக்க தடை செய்யும் சட்டம் 1992-ம் ஆண்டு புரட்சிதலைவி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறது, ‘ என்றார்.
மேலும், இலவச மடிக்கணினி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கு அளித்த பதிலில், 'இலவச லேப்டாப் திட்டம் ஒரு உன்னத திட்டம். இந்தியாவே பாராட்டும் திட்டம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் லண்டன் சென்று இருந்தபோது அங்கு பழமை வாய்ந்த கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் நரீனா என்ற மாணவி புரட்சி தலைவி அம்மா திட்டத்தில் கிடைத்த மடிக்கணிணியைத் தான் நான் இங்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று பெருமையுடன் கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது என்றார் அமைச்சர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications