தமிழக அரசின் இலவச லேப்டாப்பை பயன்படுத்தும் லண்டனில் படிக்கும் மாணவி- அமைச்சர் 'ஆனந்தக் கண்ணீர்'
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக நிரூபிக்கப்பட்டால், அக்கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று உயர்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்தீபன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட வரமுறை இல்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துகுறித்து பெற்றோர் புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட மாணவரை கல்வி நிர்வாகம் பழிவாங்கி மிரட்டுகிறது' , என்றார்.
அப்போது உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கீட்டு அளித்த பதிலில்,
உறுப்பினர் ஆதாரத்துடன் கூறினால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இதுவரை அப்படி புகார் எதுவும் வரவில்லை. பொத்தாம் பொதுவாக உறுப்பினர் கூறக்கூடாது.
கட்டாய நன்கொடை வசூலிக்க தடை செய்யும் சட்டம் 1992-ம் ஆண்டு புரட்சிதலைவி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறது, ‘ என்றார்.
மேலும், இலவச மடிக்கணினி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கு அளித்த பதிலில், 'இலவச லேப்டாப் திட்டம் ஒரு உன்னத திட்டம். இந்தியாவே பாராட்டும் திட்டம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் லண்டன் சென்று இருந்தபோது அங்கு பழமை வாய்ந்த கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் நரீனா என்ற மாணவி புரட்சி தலைவி அம்மா திட்டத்தில் கிடைத்த மடிக்கணிணியைத் தான் நான் இங்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று பெருமையுடன் கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications