ராஜ்நாத் சிங், சுஷ்மா, அருண் ஜேட்லி பெங்களூர் சென்ற தனி விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜக தலைவர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருடன் சென்ற தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறங்கியது.
அடுத்தமாதம் கர்நாடகத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்கட்ட பிரச்சாரத்தை ஆரம்பிக்க இந்த மூவரும் தனி விமானத்தில் இன்று காலை பெங்களூர் புறப்பட்டனர்.
ஆனால், வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து இந்த விமானம் டெல்லிக்குத் திருப்பப்பட்டது.
அந்த விமானம் மிக அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த மூவரும் இன்று பெங்களூரில் பொதுக் கூட்டத்தில் பேச இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications