ஆளாளுக்கு தலையணையால்அடித்துக் கொண்ட சர்வதேச தலையணை சண்டை திருவிழா
பீஜிங்: தலைக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணுனு நம்ம ஊர்ல தலையணை வைத்து தூங்குறதுக்கு தான் நாம தலையணைய பயன் படுத்துவோம். ஆனா, தலையணை கிழிய, கிழிய அடித்துக் கொள்ளும் சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் கொண்டாடப்பட்டதாம்.
கின்னஸ் முயற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த சண்டைக்கு, மக்கள்கிட்ட ஏற்பட்ட அமோக ஆதரவால ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நம்ம ஊர்ல கோழிச்சண்டை, ஜல்லிக்கட்டு மாதிரி தானாம் இதுவும். அந்த சண்டை குறித்த ஒரு ஜாலி ரிப்போர்ட்...

கின்னஸுக்காக போட்ட சண்டை...
கடந்த 2008-ம் ஆண்டு கின்னஸ் சாதனைக்காக 3ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தலையணை சண்டையினை நடத்தினர்.

வருஷத் திருவிழா...
இதற்காக அமைக்கப்பட்ட கிளப், சர்வதேச தலையணைச் சண்டையை ஆண்டு தோறும் திருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடும் படி மாத்திடுச்சு.

தலையணை சண்டை திருவிழா....
இதையடுத்து 5-ம் ஆண்டு சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகில் முக்கிய நகரங்களான, இங்கிலாந்தின் தலைநகர் லண்டன், சீனாவின் பீஜிங், பெர்லின், ரோம், பார்சிலோனா, நியூயார்க் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டே பெரு நகரங்களில் நடந்தது.

சண்டை தூள் பறந்தது...
மக்கள் தலையணைகள் மூலம் பஞ்சுகள் பறக்கும் அளவிற்கு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

மனஅழுத்தம் குறையுதாம்...
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்கு பிடிக்காத நபர்களை தலையணையில் எழுதி சண்டையிட்டதாகவும், இதன் மூலம் மன அழுத்தம் பதட்டம் குறைவாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications