ஜெர்மனியில் களேபரம்.. புதினுக்கு எதிராக அரை நிர்வாண பெண்கள் போராட்டம்
இந்தப் போராட்டம் நடந்தபோது அந்த இடத்தில் ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலொ மெர்க்கலும் அங்கிருந்தார்.
பெமன் என்ற பெண்கள் உரிமைகள் குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரும் மேலாடை எதையும் அணியவில்லை. டிராயர் மட்டுமே போட்டிருந்தனர்.
ரஷ்ய அதிபர் உள்ளிட்ட குழுவினர் கண்காட்சி அரங்கத்திற்கு வந்தபோது திடீரென மூன்று பேரும் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாக முயன்றும் கூட புடினுக்கு வெகு அருகில் வந்து ஆவேசமாக கோஷமிட்டனர். தங்களது உடலில் சர்வாதிகாரி என்று பெயிண்ட்டால் அவர்கள் எழுதியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தால் புதின் அதிர்ச்சி அடையவில்லை. மாறாக முகம் நிறைய புன்னகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர் நின்று வேடிக்கை பார்த்தார். நக்கலடிப்பது போல வாயை வைத்துக் கொண்டார். போராட்டம் குறித்து அவர் பின்னர் கருத்து தெரிவிக்கையில், நான் இதை ரசித்துப் பார்த்தேன் என்றார் புதின்.
இதற்கிடையே, இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீ்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெர்மனியை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.