உகாதி திருநாள்: திருமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: உகாதி வருடப்பிறப்பை ஒட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தெலுங்கு, கன்னட மக்களின் வருடப் பிறப்பான உகாதி இன்று ஆந்திரா, கர்நாடகாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த வருட பிறப்பையொட்டி ஆந்திர மாநிலம் திருமலையில் ஏழுமலையான் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் கோவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. அப்போது குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஆந்திர அரசு போக்குவரத்து கழக சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மாலையில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக மாட வீதிகளில் வலம் வருகிறார்.
25ல் சந்திர கிரகணம்
சித்திரை பவுர்ணமி தினமாக வரும் 25ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் கோயில் நடை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, 25ம் தேதி பகல் பொழுதில், விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், மாலை 5 மணிக்குள் சாமி தரிசனத்தை முடித்து வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, பிறகு கோவிலை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் தான் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications