உகாதி திருநாள்: திருமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: உகாதி வருடப்பிறப்பை ஒட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தெலுங்கு, கன்னட மக்களின் வருடப் பிறப்பான உகாதி இன்று ஆந்திரா, கர்நாடகாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த வருட பிறப்பையொட்டி ஆந்திர மாநிலம் திருமலையில் ஏழுமலையான் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் கோவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. அப்போது குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஆந்திர அரசு போக்குவரத்து கழக சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மாலையில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக மாட வீதிகளில் வலம் வருகிறார்.
25ல் சந்திர கிரகணம்
சித்திரை பவுர்ணமி தினமாக வரும் 25ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் கோயில் நடை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, 25ம் தேதி பகல் பொழுதில், விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. பொது தரிசனத்தில் வரும் பக்தர்களும், மாலை 5 மணிக்குள் சாமி தரிசனத்தை முடித்து வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, பிறகு கோவிலை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் தான் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications