நாங்க அப்போ பஸ்லயே இல்ல... இசைய ரசிச்சுட்டு இருந்தோம்: டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகள் இருவர் தகவல்
டெல்லி: டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டபோது நாங்கள் இசைக் கச்சேரி பார்த்தோம் என இரு குற்றவாளிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பேருந்தில் கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிறுவன் தவிர மற்ற 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுனர் ராம்சிங் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட மற்ற 4 பேரிடமும், சாட்சிகளிடமும் டெல்லி விரைவு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் பவன் குப்தா இருவரும், கற்பழிப்பு சம்பவம் நடந்த பேருந்தில் நாங்கள் இல்லை என்று நீதிபதியிடம் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் நண்பர் ஒருவருடன் ஒரு இசைக்கச்சேரியில் கலந்துகொண்டதற்கான மொபைல் போன் விடியோ ஆதரங்களையும் காட்டியுள்ளனர்.
எனவே அவர்கள் இருவரும் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications