ராஜிவ் வழக்கு- 3 தமிழரை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்: பழ. நெடுமாறன் நம்பிக்கை

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம் அனுப்பிய கருணை மனுவை தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதனால் தமது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பது 1993-ஆம் ஆண்டு 9 பேர் பலியான குண்டு வெடிப்பில் சிக்கிய பஞ்சாப்பை சேர்ந்த புல்லரின் கோரிக்கை. இவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதை ஒரு காரணமாக ஏற்று தூக்கை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதே புல்லர் வழக்குடன் சேர்த்துதான் ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களின் மனுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய தீர்ப்பின் தாக்கம் அந்த வழக்கின் தீர்ப்பிலும் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் மூன்று தமிழர் வழக்கின் தீர்ப்பிலும் நிச்சயமாக இருக்கும் .அதில் சந்தேகம் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் என்னமாதிரியான தீர்ப்பு அளித்தாலும் அதிலிருந்து மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும். மூன்று தமிழருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் கூட தமிழக சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில் மூவரையும் முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்றார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications