தேனி அருகே பத்தாம் வகுப்பு மாணவி கற்பழித்துக் கொலை
தேனி: தேனி அருகே பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாலகொம்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த வீரபாண்டி (24) என்பவர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மாணவியை காணவில்லை என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் வீரபாண்டி மீது சந்தேகம் வரவே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது, மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் வீரபாண்டி.
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறினார். இதனை அடுத்து, மாணவியின் உடலை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். வீரபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications