கூடங்குளத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரை
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதற்கான , கடலோர கண்காணிப்புப் பகுதி ஒப்புதலை வழங்க மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு அளித்த விளக்கத்தில், சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர், அணுமின் நிலையத்தில் குளிர்விக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும்.
பின்னர் அந்த நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படும். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
4 உள்பிரிவுகள்:
இந்த சுத்திகரிப்பு நிலையம் கூடங்குளம் பகுதி கடலில் இருந்து நீரை எடுத்து, அதனை சுத்திகரித்து, அணுமின் நிலையத் தேவைக்காக வழங்கும். இதில் மொத்தம் 4 சுத்திகரிப்பு உள்பிரிவுகள் உண்டு.
செயல்படும் திறன்:
ஒவ்வொரு பிரிவும் ஒரு மணி நேரத்தில் தலா 106.66 கன மீட்டர் நீரை கையாளும் திறனுடையது. இதில் மூன்று மட்டுமே செயல்படும். ஒன்று அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும்.
கழிவுகள்:
இதேபோல இந்திய அணுசக்தி நிறுவனம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அணுஉலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுகள் கடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதில் யுரேனியம், புளூட்டோனியம் கழிவுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரை:
சமீபத்தில் நடைபெற்ற கடலோர கண்காணிப்புப் பிரிவின் நிபுணர்களின் ஆய்வுக் கூட்டத்தில், இத்திட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக கடலோர மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் உள்பட்டதாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆய்வு:
அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலக்கும் இடத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications