For Daily Alerts
Just In
மனநோயாளி மகனை மருத்துவமனையில் கொலை செய்த தந்தை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மனநோய் குணமடையாத மகனை மருத்துவமனையிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஐயாதுரையின் மகன் செல்வின் மனநிலை பாதிக்கப்பட்டவர் . அவர் மனநோயாளியாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை.
இதைத் தொடர்ந்து நாகர்கோயில் அரசு பொதுமருத்துவமனையில் செல்வின் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனது மகனின் நிலையைப் பார்த்து மனமுடைந்த ஐயாதுரை, இன்று காலை 5.30 மணி அளவில் செல்வினின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து ஐயாதுரையை கைது செய்தனர்.
Comments
English summary
Nagercoil police had arrested father who was kille his mentally ill son in the Govt. Hospital on today.
Story first published: Monday, April 15, 2013, 13:03 [IST]