மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ மூன்றாம் கட்ட நடைபயணம்! நாளை தொடக்கம்

வைகோ 13 நாள் நடைப்பயண விபரம்:
16ஆம் பொள்ளாச்சி, சமத்தூர், கோட்டூர், மலையாண்டி பட்டணம்
17ஆம் பாரமடையூர், கரட்டூர், 18ஆம் தேதி தனி, உடுலை
19ஆம் தேதி கிருஷ்ணாபுரம், கணியூர்
20ஆம் தேதி செலாம்பாளையம், தாராபுரம்
21ஆம் தேதி கொளத்துப்பாளையம், பெரமியம்
22ஆம் தேதி இலக்குவநாயக்கன்பட்டி, வெள்ளகோயில்
23ஆம் தேதி முத்தூர், ஒத்தகடை, 24ஆம் தேதி சிவகிரி, அரச்சலூர்
25ஆம் தேதி நத்தக்காடையூர், சென்னிமலை
26ஆம் தேதி வெள்ளோடு, மேட்டுக்கடை
27ஆம் தேதி சித்தோடு, குமாரபாளையம்
28ஆம் தேதி பள்ளிபாளையம், ஈரோடு.
இந்த 13 நாள் நடைபயணத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் நாளைக் காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில் நடக்கிறது. மருதாசல அடிகளார் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியினர் மற்றும் ம.தி.மு.க.வினர் திளராக பங்கேற்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வைகோ ஏற்கனவே உவரி முதல் மதுரை வரையிலும், மாமல்லபுரம் முதல் மறைமலை நகர் வரையிலும் இரண்டு கட்ட நடை பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ம.தி.மு.க. இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications