நான் ரயில்வே அமைச்சராக இருந்திருக்கலாம்... ஆனா சட்டம்- ஒழுங்கு மோடி அரசின் கடமை: நிதிஷ்குமார்

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு மதமோதல்கள் வெடித்ததை முன்வைத்து மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது என்று நிதிஷ்குமார் கடுமையாக எதிர்த்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் பாரதிய ஜனதா கட்சி- ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும் தம் பங்குக்கு குறுக்குசால் ஓட்டியுள்ளார். குஜராத் கலவரத்துக்காக நரேந்திர மோடியை விமர்சிக்கும் நிதிஷ்குமார், அப்போது தாம் வகித்த ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் நிதிஷ்குமார், ரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் ரயில்வே அமைச்சரின் பணி. சட்டம் ஒழுங்கை பராமரிப்பது என்பதெல்லாம் மாநிலத்தின் பணி. இதில் நான் எங்கே தலையிட முடியாது. ஏன் ரயில்வே அமைச்சராக இருந்த போது லாலு பிரசாத் யாதவ் இதைப் போல் செய்தாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்












Click it and Unblock the Notifications