சுனில் மிட்டல், ரவி ரூயா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்! சொத்து விவரங்கள் தாக்கல்!!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் ஏப்ரல் 11-ந் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், எஸ்ஸார் குழுமத்தின் ரவி ரூயா ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் சிபிஐ உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இருவரும் தங்களின் சொத்து விவரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரனையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து சுனில் மட்ட, ரவி ரூயா ஆகியோர் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷைனி, வழக்கு விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications