கூட்டுறவு சங்க தேர்தல்: அதிமுக - சிஐடியு மோதலில் 13 பேர் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில், அ.தி.மு.க., வின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., (மார்க்சிஸ்ட்) சங்கத்தினர் மோதிக் கொண்டதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கற்கள், கம்பிகள் மூலம் இருதரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகர், அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், 2631 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், இயக்குனராக, 11 பேரை தேர்வு செய்ய, நேற்று, மனுக்கள் பெறப்பட்டன.
யார் முதலில் மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பும், இரும்புக் கம்பி, சோடா பாட்டில், சேர்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
தகராறில் ஈடுபட்டவர்களை, ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையிலான போலீசார் விரட்டினர். மோதலில், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த அன்வர், முகம்மது அலி, அபிமன்யு, மணிகண்டன், மாசானம், ராஜாங்கம், சி.ஐ.டி.யு, சங்க பொருளாளர் மணிகண்டன், முத்துச்சாமி, சதீஷ்குமார், ஜெயக்குமார், சின்னத்துரை, மணிகண்டன், ராஜா காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் காமயகவுண்டன்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வேட்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பட்டமங்களத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினருக்குள்ளேயே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலைக்க வேண்டி வந்தது.












Click it and Unblock the Notifications