பெங்களூரில் இதுவரை நடந்த குண்டுவெடிப்புகள்
பெங்களூர்: பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நேற்று காலை குண்டு வெடித்து 16 பேர் காயமடைந்துள்ளனர்.
2008ல் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. மடிவாலா பஸ் டிப்போ, மைசூர் ரோடு, அடுகோடி, கோரமங்கலா, விட்டல் மல்லையா ரோடு, லாங்போர்டு ரோடு மற்றும் ரிச்மண்ட் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தனர்.
2010ல் இரு குண்டு வெடிப்புகள்
2010ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மாலை 4 மணிக்கு துவங்கவிருந்தது. இந்நிலையில் மதியம் 3.15 மணிக்கு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் போர்டு பின்னால் இருந்த குண்டு வெடித்தது. இதையடுத்து ஸ்டேடியம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதில் 4 போலீசார், ஒரு தனியார் நிறுவனர் செக்யூரிட்டி மற்றும் 10 பேர் காயம் அடைந்தனர்.
நேற்று பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு
நேற்று மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 16 பேர் காயம் அடைந்தனர்.